என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாட்டு இறைச்சி கடைகள் நடத்த அனுமதி வழங்க கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்
    X

    மாட்டு இறைச்சி கடைகள் நடத்த அனுமதி வழங்க கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்

    • புஞ்சைபுளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் மாட்டு இறைச்சி கடைகள் செயல்பட்டு வந்தது.
    • இந்த கடைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் மாட்டு இறைச்சி கடைகள் செயல்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் சுகாதாரக் கேடு நோய் தொற்று ஏற்படுவதாக நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.

    இதையொட்டி இந்த கடைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

    இந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த வாரச்சந்தையில் மாட்டிறைச்சி கடைகள் செயல்பட்டு வந்தது.

    சந்தை வளாகத்தில் மாட்டு இறைச்சி கடைகள் மீண்டும் வைக்கவும் விற்பதற்கு அனுமதிக்க வேண்டும். மற்றும் அந்த பகுதியில் கடைகள் கட்டி தர வேண்டும் என அவர்கள் கோஷங்கள் எழுப்பி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

    Next Story
    ×