என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஈரோட்டில் கலெக்டா் ராஜகோபால் சுன்கரா தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை
- ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாட்டின் 77-வது சுதந்திர தினவிழா இன்று காலை ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதானத்தில் கொண்டாடப்பட்டது.
- 73 பயனாளி களுக்கு ரூ.2 கோடியே 73 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஈரோடு:
இந்தியாவின் 77-வது சுதந்திர தின விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாட்டின் 77-வது சுதந்திர தினவிழா இன்று காலை ஈரோடு அடுத்துள்ள ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதானத்தில் கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும். ஆனால் இந்த ஆண்டு பராமரிப்பு பணி கார ணமாக அணைக்கல் பாளை யம் ஆயுதப்படை மைதா னத்திற்கு மாற்றப்பட்டது. இன்று காலை 9.05 மணிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அலங்கரிக்கப் பட்டிருந்த தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் காவல் துறையி னரின் அணிவகுப்பு மரியா தையை ஏற்று க்கொண்டார்.திறந்தவெளி ஜிப்பில் நின்று காவலர்க ளின் அணிக்கு மரியாதை பார்வையிட்டார். மாவட்ட போலீஸ் சூப்பிர ண்டு ஜவகர் உடன் இருந்தா ர். இதைத்தொடர்ந்து மூவர்ண பலூன்களையும் பறக்க விட்டார். இதை த்தொடர்ந்து சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு சால்வை அணித்து கலெக்டர் ராஜகோ பால் சுன்கரா கவுரவித்தார்.
தொடர்ந்து காவல்து றையில் சிறப்பாக பணியா ற்றிய 43 காவலர்களுக்கும், முன்னாள் படை வீரர் நலத்துறையின் சார்பில் 3 ேபருக்கும், என்.சி.சி. மாணவர்கள் 7 பேருக்கும், கால்நடை பராமரிப்புத்து றையின் சார்பில் 7 நபர்களு க்கும், துணை இயக்குநர் குடும்ப நலத்துறையின் சார்பில் 3 நபர்களுக்கும்,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் சார்பில் 15 நபர்களுக்கும், முதல மைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 7 நபர்கள், சித்த மருத்துவத்துறையின் சார்பில் 3 நபர்கள், செய்தி மக்கள் தொடர்பு த்துறையின் சார்பில் 3 நபர்களுக்கும், ஈரோடு மாநகராட்சியின் சார்பில் 14 நபர்களுக்கும்,
வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை த்துறையின் சார்பில் 25 நபர்களுக்கும், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் 8 நபர்களுக்கும், வட்டார போக்கு வரத்துறையின் சார்பில் 8 நபர்களுக்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட தன்னார்வ பணியா ளர்கள் 52 பேர் என மொத்தம் 364 நபர்களுக்கு பாராட்டு ச்சான்றிதழ்களை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்.
பின்னர் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்து றை, முன்னாள் படைவீர ர்நலத்துறை, தாட்கோ, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மகளிர் திட்டம் என பல்வேறு துறைகளின் சார்பில் 73 பயனாளி களுக்கு ரூ.2 கோடியே 73 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சுதந்திர தினத்தையொ ட்டி அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லம் மாணவ, மாணவியர்கள் உள்பட பல்வேறு பள்ளி களை சேர்ந்த மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கூடுதல் கலெக்டர் மனீஷ், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், ஆர்.டி.ஓ. சதீஸ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குழந்தை ராஜன் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சுதந்திர தின விழா வையொட்டி ஈரோடு மாவ ட்டத்தில் உள்ள பஸ் நிலை யங்கள், ெரயில்நிலை யம், கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் உள்ளிட்ட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்