search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தம்
    X

    ஈரோடு ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தம்

    • முக்கிய முகூர்த்த நாட்கள் முடி வடைந்ததையடுத்து இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் விற்பனை மந்தமாக காணப்பட்டது.
    • ஆடி மாதம் தொடக்கம் வரை இதே மந்த நிலை தான் நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே வாரம் தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெறுவது வழக்கம்.

    இந்த சந்தைக்கு ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகா ராஷ்டிரா, போன்ற வெளி மாநிலங்கள் இருந்து 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருவது வழக்கம். இதுபோல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்கிறார்கள்.

    இந்நிலையில் ஜவுளி சந்தையில் கடந்த சில நாட்களாக பள்ளி சீருடை, முகூர்த்த ஜவுளிகள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வந்தது. மேலும் உள்ளூர் திருவிழாக்களையொட்டி வேட்டி, சேலை, துண்டு உள்ளிட்டவைகள் விற்பனையானது.

    இந்நிலையில் முக்கிய முகூர்த்த நாட்கள் முடி வடைந்ததையடுத்து இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் விற்பனை மந்தமாக காணப்பட்டது. ஆடி மாதம் தொடக்கம் வரை இதே நிலை நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறியதாவது:-

    ஆனி மாதத்தின் முக்கிய முகூர்த்த நாட்கள் நிறை வடைந்து விட்டதால் ஜவுளி சந்தையில் வியா பாரம் மந்த நிலையில் காணப்பட்டது. சில்லரை விற்பனை 30 சதவீதமும், மொத்த வியாபாரம் 20 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. வழக்கமாக ஆந்திரா வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் வந்து ஜவுளிகளை கொள்முதல் செய்வது வழக்கம்.

    ஆனால் இந்தாண்டு ஆந்திரா வியாபாரிகள் யாரும் வரவில்லை. கேரளா வில் இருந்து வர வேண்டிய ஆர்டர்களும் வரவில்லை. ஆடி மாதம் தொடக்கம் வரை இதே மந்த நிலை தான் நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறி னர்.

    Next Story
    ×