search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் கலந்த ஜூஸ் குடித்த சிறுவன் பலி
    X

    விஷம் கலந்த ஜூஸ் குடித்த சிறுவன் பலி

    • விஷம் கலந்த ஜூஸ் குடித்த சிறுவன் பலியானார்
    • தாய்- மற்றொரு மகனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது

    ஈரோடு,

    ஈரோடு அருகே ரகுபதி நாயக்கன்பாளையம் வாய்க்கால்மேடு ஜீவா னந்தம் வீதியை சேர்ந்தவர் சக்திவேல். கட்டிட தொழி லாளி. இவருடைய மனைவி காவிரி. இவர்களுக்கு விஷ்ணு (9), விஸ்வா (7) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.இவர்கள் காவிரியின் தந்தை சுப்பிரமணியின் வீட்டில் வசித்து வருகி ன்றனர். விஷ்ணுவுக்கு பிறந்ததில் இருந்தே பேச முடியாமலும், நடக்க முடியாமலும் இருந்து வந்தான். விஸ்வா 2-ம் வகுப்பு படித்து வருகிறான்.கடந்த 30-ந் தேதி இரவு சக்திவேல் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது சாப்பாட்டுக்கு பொறியல் இல்லையென்று காவிரி யிடம் சக்திவேல் தகராறில் ஈடுபட்டார்.

    இதனால் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் காவிரி கோபித்து கொண்டு தனது குழந்தை களுடன் அருகில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை யில் சக்திவேல் வேலைக்கு சென்ற பிறகு காவிரி மீண்டும் வீட்டுக்கு திரும்பி னார்.இந்தநிலையில் காவிரி திடீரென வீட்டுக்கு வெளியில் நின்று வாந்தி எடுத்தார். அப்போது அங்கு வந்த காவிரியின் சகோதரன் மணிகண்டன், உடலுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டு உள்ளார். அதற்கு காவிரி, 3 பாட்டிலில் மாங்காய் ஜூஸ் வாங்கி வந்து விஷத்தை கலந்ததா கவும், அதில் ஒரு பாட்டில் ஜூசை குடித்து விட்டதாக வும் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணி கண்டன் உடனடியாக வீட்டு க்குள் சென்று பார்த்தார்.

    அப்போது மீதமுள்ள 2 பாட்டில்களில் இருந்த ஜூசையும் விஷ்ணுவும், விஸ்வாவும் குடித்து கொண்டு இருந்ததை பார்த்த மணிகண்டன், விரைந்து சென்று பாட்டில்க ளை பிடிங்கி வெளியில் வீசினார். இதைத்தொடர்ந்து காவிரி மற்றும் 2 குழந்தை களையும் மணிகண்டன் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.அங்கு அவருக்கு டாக்ட ர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு 3 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் விஷ்ணு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாப மாக உயிரிழந்தான். காவிரிக்கும், விஸ்வாவுக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×