என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விதைப்பண்ணைகளில் விதைச்சான்று உதவி இயக்குநர் ஆய்வு
    X

    விதைப்பண்ணைகளில் விதைச்சான்று உதவி இயக்குநர் ஆய்வு

    • விதைப்பண்ணைகள் தற்போது பூப்பருவம் முதல் அறுவடை நிலை வரை உள்ளது.
    • அறுவடை தொழில் நுட்ப ங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனப்பகுதியில் ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மற்றும் கோவை மாவட்டங்களை ேசர்ந்த தனியார், அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் விதைப் பண்ணைகள் அமைத்துள்ளனர்.

    இவ்விதைப் பண்ணை களை ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகன சுந்தரம் ஆய்வு செய்தார். மேலும் விதைச்சான்று உதவி இயக்குநர் தெரிவித்ததாவது:-

    விதை உற்பத்தியாளர்கள் இப்பகுதியில் நெல் ஏடிடி 37, ஏஎஸ்டி 16, டிபிஎஸ் 5, எம்டியு 1010, என்எல்ஆர் 34449 ஆகிய ரகங்களின் வல்லுநர் மற்றும் ஆதாரநிலை ஒன்று விதைகளை கொண்டு விதைப்பண்ணைகளை அமைத்துள்ளனர்.

    இவ்விதைப்பண்ணைகள் தற்போது பூப்பருவம் முதல் அறுவடை நிலை வரை உள்ளது. இவ்விதைப் பண்ணை களின் வயல் தரம் ஆய்வு செய்யப்பட்டு சாகுபடி யாளர்களுக்கு பயிர் பாதுகாப்பு மற்றும் அறுவடை தொழில் நுட்ப ங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தால் தற்போது புதிதாக அறிமுகப் படுத்தப்பட்ட புதிய நெல் ரகங்களான ஏஎஸ்டி 21, கோ 54, கோ 55 மற்றும் ஏடிடி 57 ரகங்களின் உண்மைநிலை மாதிரி விதைப்பண்ணை களும் ஆய்வு செய்யப்பட்டு ஈரோடு மாவட்ட விதைச்சான்று அலுவலர்கள் மற்றும் கோபிசெட்டி பாளையம் உதவி விதை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    Next Story
    ×