மது பாட்டில்கள் விற்பனைக்கு கொண்டு வந்த முதியவர் கைது

மோட்டார் சைக்கிளில் வந்தவரை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர். அவரிடம் 25 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பங்களாபுதூர் போலீசார் வேலுச்சாமி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மது பாட்டில்கள் விற்பனைக்கு கொண்டு வந்த முதியவர் கைது
Published on

டி.என்.பாளையம்:

டி.என்.பாளையம் அருகே பங்களாப்புதூர் போலீசார் உப்புபள்ளம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர்.

அவரிடம் 25 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் காளியூர் செல்லியபாளையம் பகுதியை சோ்ந்த வேலுச்சாமி (65) என்பதும் மது பாட்டில்கள் விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து பங்களாபுதூர் போலீசார் வேலுச்சாமி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் இருந்து 25 மது பாட்டில்கள், ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனா்.

X

Maalai Malar
www.maalaimalar.com