என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கீழ்பவானி வாய்க்காலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி
- கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்று தண்ணீரில் குதித்துள்ளார்.
- தண்ணீரில் தத்தளித்த மூதாட்டி குஞ்சம்மாளை மீட்டு கரைப்பகுதிக்கு கொண்டு வந்தனர்.
கோபி:
சேலம் மாவட்டம் மேட்டூ ரை சேர்ந்தவர் குஞ்சம்மாள் (62). இவரது மகள் ராஜா மணி. கோபி சீதாலட்சுமி புரத்தில் கணவருடன் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடல் நிலை சரியில்லை என்ற தகவலை அறிந்த குஞ்சம்மாள் தனது மகளை பார்க்க கோபி வந்துள்ளார்.
அப்போது அவரது மகள் ராஜாமணியும், அவரது கணவரும் உடல் நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக கிடப்பதை கண்டு மனவேதனையில் குஞ்சம்மாள் செய்வதறி யாது மகளின் வீட்டை விட்டு வெளியேறினார்.
பின்னர் தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் திருப்பூர் செல்லும் சாலையில் உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்று தண்ணீரில் குதித்துள்ளார்.
குஞ்சம்மாள் தற்கொலை செய்வதற்காக வாய்காலில் குதித்ததை பார்த்து அருகே துணி துவைத்து கொண்டிரு ந்தவர்கள் குஞ்சம்மாளை காப்பாற்றும்படி சத்தமிட்டுள்ளனர்.
அப்போது அந்த வழியாக சென்ற சிலர் உடனடியாக வாய்காலில் குதித்து தண்ணீரில் தத்தளித்த மூதாட்டி குஞ்சம்மாளை மீட்டு கரைப்பகுதிக்கு கொண்டு வந்து சேர்த்து கோபி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோபி போலீசார் தற்கொலைக்கு முயன்ற குஞ்சம்மாளிடம் விசாரணை நடத்தியதில் அவரது மகளும், மருமகனும் உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வருவதை கண்டு மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து வாய்காலில் குதித்ததாக தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து போலீசார் மூதாட்டி குஞ்சம்மாளுக்கு ஆறுதல் கூறி அவரது மகள் வீட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை பொதுமக்கள் மீட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்