search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா விற்ற 17 பேரின் வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை
    X

    கஞ்சா விற்ற 17 பேரின் வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை

    • கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று தீவிர கஞ்சா ஒழிப்பு வேட்டை நடத்தப்பட்டது.
    • இதில் கஞ்சா விற்பனை செய்ததாக மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஈரோடு:

    போதை பொருட்கள் ஒழிப்பது தொடர்பாக தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. போலீசார் தொடர்ந்து ரோந்து சுற்றி கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் ஈரோடு தாலுகா போலீசார் சென்னிமலை ரோடு, அணைக்கட்டு, வாய்க்கால்கரை ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர்.

    அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததாக ஈரோடு சென்னிமலைரோடு சேனாதிபதிபாளையத்தை சேர்ந்த பழனிசாமியின் மகன் சஞ்சய் (வயது 21), ரங்கம்பாளையம் ஜீவாநகரை சேர்ந்த சங்கரின் மகன் சந்தோஷ் (22), சூரம்பட்டிவலசு ராமமூர்த்தி தெருவை சேர்ந்த செல்வத்தின் மகன் கவின்குமார் (21) ஆகியோரை கைது செய்தார்கள்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் தீவிர கஞ்சா ஒழிப்பு வேட்டை நடத்தப்பட்டது.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

    கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று தீவிர கஞ்சா ஒழிப்பு வேட்டை நடத்தப்பட்டது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து சுற்றி வந்தார்கள். அதன்படி 118 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் கஞ்சா விற்பனை செய்ததாக மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களது வங்கி கணக்கு களை முடக்குவதற்காக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

    மேலும் 70 பேர் இனிவரும் காலத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக நிர்வாகத்துறை நடுவர் முன்னிலையில் நன்னட த்தைக்கான பிணைய பத்திரம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    பொதுமக்கள் தங்களது பகுதிகளில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடப்பது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு 94880 10684 என்ற செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் அப் அல்லது குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறிஉள்ளார்.

    Next Story
    ×