search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 மாதமாக அட்டகாசம் செய்து வரும் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
    X

    2 மாதமாக அட்டகாசம் செய்து வரும் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • தாளவாடி அருகே பசு மாட்டை அடித்து கொன்றது
    • 2 மாதமாக அட்டகாசம் செய்து வரும் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வன விலங்குகள் வசித்து வரு கின்றன.

    இதில் தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளி யேறும் புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை அடித்து கொல்வது தொடர்கதை யாகி வருகிறது.

    இந்த நிலையில் தாளவாடியை அடுத்த சேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகமணி (48) விவசாயி. இவர் 6 மாடுகள் வளர்த்து வருகிறார்.

    இவர் மாடுகளை தன்னுடைய தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.

    அதன்படி வழக்கம் போல் தனது தோட்டத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு சென்று விட்டார். மதியம் மாடுகள் திடீரென கத்தின. மாடுகளின் சத்தம் கேட்டு நாகமணி தோட்டத்துக்கு சென்றார்.

    அப்போது அங்கு பசு மாடு ஒன்று கழுத்து, முதுகு போன்ற பகுதியில் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் மாட்டை புலி அடித்துக்கொன்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

    இது குறித்து தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வன ச்சரகர் சதீஷ் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த பசு மாட்டை பார்வையிட்டனர். பின்னர் அங்கு பதிவாகி இருந்த கால் தடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த கால் தடம் புலியின் கால் தடம் என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். எனவே மாட்டை புலி அடித்து க்கொன்றது தெரிய வந்தது.

    கடந்த 2 மாதத்தில் மட்டும் 3 நாய், 2 கன்றுக்குட்டி ஆகியவற்றை புலி அடித்துக்கொன்று அட்டகாசம் செய்து உள்ளது. மேலும் கடந்த வாரம் மாடு ஒன்றையும் புலி கொன்று உள்ளது.

    இந்த நிலையில் மீண்டும் கிராமத்துக்குள் புலி புகுந்து மாட்டை அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும் போது, புலியின் நடமாட்டத்தை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்து, கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் புலி தாக்கி இறந்த மாட்டுக்கு உண்டான இழப்பீட்டு தொகையை விவசாயிக்கு வழங்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×