என் மலர்
உள்ளூர் செய்திகள்

கார்மெண்ட்ஸ் கம்பெனியில் பணம் திருடிய வாலிபர் சிறையில் அடைப்பு
- கார்மெண்ட்ஸ் கம்பெனியில் பணம் திருடிய வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்
- போலீசார் அவர் வைத்திருந்த பணம் ரூ.3 ஆயிரத்து 850 ரூபாய் மற்றும் செல்போனை பறிமுதல் பறிமுதல் செய்தனர்.
புளியம்பட்டி,
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பஸ் நிலையம் பின்புறம் முத்துச்சாமி என்பவர் கார்மெண்ட்ஸ் கம்பெனி நடத்தி வருகிறார். இவர் கடந்த சில தினங்க ளுக்கு முன்பு கேரள மாநிலம் சுற்றுலா சென்றபோது இவரது கம்பெனியின் பின் பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ.80 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து திருடனை தேடி வந்தனர்.
இந்நிலையில் போலீசார் சத்தியமங்கலம் வடக்கு ப்பேட்டையில் சுற்றித்திரிந்து நபரை பிடித்து விசாரித்த போது அவர் கர்நாடகா மாநிலம் நஞ்சன்கோடு சிந்தகள்ளி சேர்ந்த ரங்கசாமி (வயது 27) என்பதும், புளிய ம்பட்டி பனியன் கம்பெனியில் பணத்தை திருடி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து ரங்கசாமியை கைது செய்த போலீசார் அவர் வைத்திருந்த பணம் ரூ.3 ஆயிரத்து 850 ரூபாய் மற்றும் செல்போனை பறிமுதல் பறிமுதல் செய்தனர். பின்னர் ரங்கசாமியை நீதிம ன்ற காவலுக்கு அனுப்பி வைத்து சிறையில் அடைத்தனர்.






