என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரத்திலிருந்த பலாப்பழத்தை சுவைத்த ஒற்றை யானை
    X

    தோட்டத்தில் உள்ள பலாப்பழத்தை யானை ருசிக்கும் காட்சி.

    மரத்திலிருந்த பலாப்பழத்தை சுவைத்த ஒற்றை யானை

    • பலாப்பழத்தை யானை ஒன்று தனது தும்பிக்கையால் பறிக்க முயற்சி செய்தது.
    • வனத்துறையினர் யானையை பட்டாசு வெடித்து காட்டிற்குள் விரட்டி அடித்தனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட 10 -க்கும் மேற்பட்ட வனச்சரகத்தில் சிறுத்தை, புலி, யானைகள், காட்டெருமைகள் உட்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இதில் யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி கரும்பு லாரிகளை வழிமறிப்பதும், கரும்பு தோட்டம் மற்றும் மக்காச்சோள பயிர்களை விவசாயி தோட்டத்தில் புகுந்து சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் சமீபகாலமாக யானை பலாப்பழத்தோட்டங்களில் புகுந்து பலாப்பழத்தை ருசித்தும் வருகிறது.

    இந்த நிலையில் கடம்பூர் அடுத்த நடூர் கிராமத்தில் ராமர் என்பவரது தோட்டத்தில் உள்ள பலாப்பழ மரத்தில் உள்ள பலாப்பழத்தை யானை ஒன்று தனது தும்பிக்கையால் பறிக்க முயற்சி செய்தது.

    இது குறித்து ராமர் கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடம்பூர் வனத்துறையினர் யானையை பட்டாசு வெடித்து அருகில் உள்ள மக்காச்சோள காட்டிற்குள் விரட்டி அடித்தனர்.

    இதில் பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து யானையின் பின்புறம் பட்டாசு வெடித்தபடி சென்றதால் ஆத்திரமடைந்த காட்டு யானை பொது மக்களை திடீரென துரத்தியது.

    இதனால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அந்த ஒற்றையானை வன பகுதிக்குள் மீண்டும் சென்றது.

    தொடர்ந்து வனப்பகுதியை விட்டு வெளியே வரும் ஒற்றை காட்டு யானையை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் எனவும் கூச்சலிட வேண்டாம் எனவும் கடம்பூர் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×