என் மலர்
உள்ளூர் செய்திகள்

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு
- அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் உயிரிழந்தார்
- போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம், அரச்சலூரை அடுத்த கொமராபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (45). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் அரச்சலூரில் உள்ள ஒரு கரும்பு ஆலையில் வேலை பார்த்து வந்து உள்ளார். சம்பத்தன்று அவரது சகோதரர் ரவிச்சந்திரன் கரும்பு ஆலையில் உள்ள அவரது அண்ணனின் அறைக்கு சென்று பார்த்து உள்ளார். அங்கு சிவக்குமார் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு இறந்த நிலையில் பிணமாக கிடந்து உள்ளார். இது குறித்து ரவிச்சந்திரன் அரச்சலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






