search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேட்பாரற்று நிற்கும் மோட்டார் சைக்கிள்
    X

    கேட்பாரற்று நிற்கும் மோட்டார் சைக்கிள்

    • மலைப்பாதை வழியாக மேலே சென்று அந்த இயற்கை அழகை பார்த்து ரசித்து செல்கின்றார்கள்.
    • மர்மநபர்கள் திருடி வந்து எரிபொருள் இல்லாமல் அங்கேயே நிறுத்திவிட்டு சென்று விட்டார்களா?

    அந்தியூர்,

    அந்தியூர் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதியில் அமை ந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை.

    இந்த அணையை சுற்றி பார்ப்பதற்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணி கள் அதிக அளவில் வந்து செல்வார்கள். தற்போது இந்த அணையின் முன் பகுதி நுழைவாயிலில் பெரிய கதவு போட்டு பூட்டப் பட்டுள்ளது. இதனால் பர்கூர் மலைப்பாதை வழியாக மேலே சென்று அந்த இயற்கை அழகை பார்த்து ரசித்து செல்கின்றார்கள்.

    இந்த நிலையில் வரட்டுப்பள்ளம் அணை அருகே கடந்த 2 நாட்களாக மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்ட இடத்திலேயே இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றார்கள்.

    இந்த மோட்டார் சைக்கிள் யாருடையது, மர்மநபர்கள் திருடி வந்து எரிபொருள் இல்லாமல் அங்கேயே நிறுத்திவிட்டு சென்று விட்டார்களா? இல்லை மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் அங்கு நிறுத்திவிட்டு வனப்பகுதிகளுக்குள் சென்று மீண்டும் திரும்பி வரவில்லையா? என்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.

    இதனால் அந்தியூர் பகுதியில் இந்த செய்தி சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. எனவே இது தொடர்பாக பர்கூர் போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றி யாருடையது, எதற்காக இங்கே நிற்த்தப்பட்டுள்ளது என்று குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×