search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகனுடன் மோட்டார்சைக்கிளில் சென்ற தாய் தவறி விழுந்து பலி
    X

    மகனுடன் மோட்டார்சைக்கிளில் சென்ற தாய் தவறி விழுந்து பலி

    • வர்ஷலா தலை சுற்று ஏற்பட்டு மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி கீழே மயங்கி விழுந்தார்.
    • இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அடுத்த மெக்கானிக் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி வர்ஷலா (58).

    உடல்நலம் சரியில்லாததால் வர்ஷலாவை அவரது இளைய மகன் மோட்டார்சை க்கிளில் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

    தொட்டம்பாளையம் அருகே சென்றபோது திடீரென வர்ஷலா தலை சுற்று ஏற்பட்டு மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி கீழே மயங்கி விழுந்தார்.

    இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் சத்திய மங்கலம் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்கா க கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டார். அங்கு சிகிச்சை ப லனின்றி வர்ஷலா பரிதா பமாக இறந்தார்.

    இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழ க்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    Next Story
    ×