என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பருப்பு வியாபாரி திராவகம் குடித்து தற்கொலை
    X

    பருப்பு வியாபாரி திராவகம் குடித்து தற்கொலை

    • கோபாலகிருஷ்ணன் சம்பவத்தன்று திராவகத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
    • ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    ஈரோடு:

    ஈரோடு குறிக்காரன் பாளையம் சரவணபவன் 2-வது வீதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (57). பருப்பு வியாபாரி. இவரது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், கடந்த சில மாதங்களாக வியாபா ரத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    வியாபாரத்திற்காக வாங்கிய பணத்தை செலுத்த முடியாமல் மனவேதனையில் இருந்த கோபாலகிருஷ்ணன் சம்பவத்தன்று வீட்டில் கழிப்பறையை சுத்தம் செய்யும் திராவகத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    இதையடுத்து அவரது குடும்பத்தினர் கோபால கிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிக்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோபாலகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    Next Story
    ×