search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்னை மரத்தில் இடி விழுந்து  தீப்பிடித்தது
    X

    தென்னை மரத்தில் இடி விழுந்து தீப்பிடித்தது

    • பெருந்துறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடி- மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.
    • அப்போது செந்தில்குமார் தோட்டத்தில் உள்ள ஒரு தென்னை மரத்தின் மீது திடீரென இடி விழுந்தது.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்துள்ள பணிக்கம்பாளையம், டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த தங்கமுத்து என்ப வரது மகன் செந்தில்குமார். இவர் தனது தோட்டத்தில் தென்னை மரங்கள் வைத்து வளர்த்து வருகிறார்.

    தென்னை மரங்களுக்கு கீழ் தகர சீட்டு கொண்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்புகளில் வடமாநிலத்தவர்கள் தங்கி அங்குள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு பெருந்துறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடி- மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    அப்போது செந்தில்குமார் தோட்டத்தில் உள்ள ஒரு தென்னை மரத்தின் மீது திடீரென இடி விழுந்தது. இதில் அந்த தென்னை மரம் தீப்பற்றி எறிய தொடங்கியது. இதை தொடர்நது மரத்தில் இருந்து நெருப்பு பொறிகள் கீழே இருந்த குடியிருப்பு பகுதியின் மீது விழுந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்த வர்கள் உடனடியாக பெரு ந்துறை தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரி வித்தனர். நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் தென்னை மரத்தில் ஏற்பட்ட தீயை போராடி அணை த்தனர். மேலும் குடியிருப்பு பகுதிகளில் தீ பரவாமல் தடு த்தனர்.

    Next Story
    ×