மழையால் தடுமாறி கிணற்றுக்குள் விழுந்த எருமை கன்று குட்டி

கன்று குட்டி ஒன்று தடுப்பு சுவர் இல்லாத கிணற்றின் அருகே மேய்ந்து கொண்டு இருந்தது.அப்போது மேய்ந்து கொண்டு இருந்த கன்றுக்குட்டி நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தது.
மழையால் தடுமாறி கிணற்றுக்குள் விழுந்த எருமை கன்று குட்டி
Published on

பெருந்துறை:

பெருந்துறை அடுத்துள்ள துடுப்பதி தோப்பு பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வ ராஜ். இவர் குடும்பத்துடன் அதே பகுதியில் குடியிருந்து விவசாயம் செய்து வரு கிறார். இவரது தோட்டத்தில் 70 அடி ஆழமுள்ள ஒரு கிணறு உள்ளது.

அதில் 40 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. மேலும் அவரது தோட்ட த்தில் பசு மாடுகள், எருமை கன்று குட்டிகள் வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது கன்று குட்டி ஒன்று தடுப்பு சுவர் இல்லாத கிணற்றின் அருகே மேய்ந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த பகுதியில் மழை பெய்து கொண்டு இருந்தது. இதனால் அந்த பகுதி முழு வதும் ஈரமாக காணப்பட்டது.

அப்போது அந்த பகுதியில் மேய்ந்து கொண்டு இருந்த கன்றுக்குட்டி நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வ ராஜ் உடனடியாக தீய ணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

இதையடுத்து பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலை மையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

தொடர்ந்து அவர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி கயிறு கட்டி எருமை கன்று குட்டியை உயிருடன் மீட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com