என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நட்டாற்றீஸ்வரர் கோவில் உள்பட 8 கோவில்கள்   பழமைமாறாமல் புதுப்பிக்க பரிந்துரை
    X

    நட்டாற்றீஸ்வரர் கோவில் உள்பட 8 கோவில்கள் பழமைமாறாமல் புதுப்பிக்க பரிந்துரை

    • ஈரோடு மாவட்டத்தில் இருந்து 8 பெரிய கோவில்களை புதுப்பிக்க தேர்வு செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
    • இப்பட்டியலில் உள்ள கோவில்களை ஆய்வு செய்து எந்தெந்த கோவில்களில் திருப்பணி மேற்கொள்ளலாம் என வல்லுனர் குழு பரிந்துரைத்த பின் அந்த கோவில்களில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    ஈரோடு:

    தொன்மையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க இந்து சமய அறநிலையத்துறை வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு சம்பந்தப்பட்ட கோவில்களை ஆய்வு செய்து அந்தக் குழு கொடுக்கும் பரிந்துரை அடிப்படையில் கோவில்கள் புதுப்பிக்கப்படும்.

    அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து 8 பெரிய கோவில்களை புதுப்பிக்க தேர்வு செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:

    தொன்மையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பாக மாநில அளவிலான 46-வது வல்லுநர் குழு கூட்டம் சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்தது. இந்த வல்லுநர் குழுவின் ஆய்வுகள் பரிந்துரைகள் படி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

    இதற்காக ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மகிமாலீஸ்வரர் கோவில், பவானி வட்டம் எட்டுக்குட்டை அரங்கநாதர் கோவில், வெள்ளோடு ராசா கோவில், பெருந்துறை விஜயபுரி அம்மன் கோவில், காங்கயம் பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவில், திண்டல் வேலாயுத சுவாமி கோவில், பவானிசாகர் அருகே கெஜட்டி ஆதி கருவண்ணராயர்பொம்ம தேவர் வீரசுந்தரி கோவில், கோபி வட்டம் பொலவக்காளிபாளையம் பொன்னேந்தி நாராயண பெருமாள் கோவில் உள்ளிட்ட 8 கோவில்களை திருப்பணிக்கு தேர்வு செய்து வல்லுனர் குழுவுக்கு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் இப்பட்டியலில் உள்ள கோவில்களை ஆய்வு செய்து எந்தெந்த கோவில்களில் திருப்பணி மேற்கொள்ளலாம் என வல்லுனர் குழு பரிந்துரைத்த பின் அந்த கோவில்களில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×