என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 7 பேர் கைது
- லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- இதில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனை செய்து வருகிறார்கள்.
இதேபோல் ஈரோடு பச்சப்பாளி பகுதியில் முகமது சித்திக் என்பவர் நின்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு வாலிபர் அவரிடம் வெள்ளை தாளில் லாட்டரி சீட்டுகளின் எண்கள் எழுதி அவரிடம் வாங்க வற்புறுத்தினார்.
இதை வாங்க விருப்பம் இல்லாத அவர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் லாட்டரி விற்பனை செய்தவரை பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர் பச்சப்பாளியை சேர்ந்த மாரிசாமி என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதி வைத்து இருந்த வெள்ளை தாள்களை பறிமுதல் செய்தனர்.
பவானி அடுத்த லட்சுமி நகர் பகுதியில் தொட்டிபாளையத்தை சேர்ந்த லோகநாதன் (26) என்பவர் வெள்ளை தாளில் லாட்டரி சீட்டு எண்களை எழுதி விற்பனை செய்ய வைத்து இருந்தார்.
இதையடுத்து சித்தோடு போலீசார் அவரை பிடித்து விசாரித்து அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு எண்களை எழுதி வைத்து இருந்த வெள்ளை தாள்களை பறிமுதல் செய்தனர்.
இதே போல் சித்தோடு அடுத்த ஆர்.என். புதூர் பகுதியில் வெள்ளை தாளில் லாட்டரி சீட்டு எண்களை எழுதி வைத்து விற்பனை செய்த ஜெகதீசன் (37) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதி வைத்து இருந்த வெள்ளை தாள்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மரப்பாலம் பகுதியில் வெள்ளை தாளில் லாட்டரி சீட்டு எண்கள் எழுதி வைத்து விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த செந்தில்வேலன் (57) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதி வைத்து இருந்த வெள்ளை தாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 4 பேரை கைது செய்தனர்.
இதேபோல் சத்தியமங்கலம் பகுதியில் சிலர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சத்தியமங்கலம் கோட்டு வீராம்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த பகுதியில் 2 பேர் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ய வைத்து இருந்தனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்த சத்தியசீலன் (73), சத்தியமங்கலம் அடுத்த ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த சிவா (42) என தெரிய வந்தது.
இதை தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரத்து 160 மதிப்புள்ள 90 லாட்டரி சீட்டுகள் ரூ.20 ஆயிரத்து 500 பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதே போல் சத்தியமங்கலம் பூ மார்க்கெட் அருகே ஒருவர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கொண்டு லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்து இருந்தார்.
அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் பு.புளியம்பட்டி பகுதியை சேர்ந்த அன்வர் பாஷா (49) என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு வைத்து இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் அவரிடம் இருந்து ரூ.480 மதிப்புள்ள 12 லாட்டரி சீட்டுகள், ரூ.17 ஆயிரத்து 700 பணம் மற்றும் அவரது மோட்டார் சைக்கிள் ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்