search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் கவர் விற்பனை செய்த 5 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம்
    X

    பிளாஸ்டிக் கவர் விற்பனை செய்த 5 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம்

    • ஓட்டல்,பேக்கரி, மளிகை கடைகளில் சென்னிமலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் திடீர் ஆய்வு செய்தார்.
    • தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை செய்த 5 கடைகளுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கினர்.

    சென்னிமலை:

    சென்னிமலை பகுதியில் உள்ள ஓட்டல்,பேக்கரி, பழ முதிர் நிலையங்கள், பேன்சி ஸ்டோர்ஸ், மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சென்னிமலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் திடீர் ஆய்வு செய்தார்.

    ஆய்வில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை செய்த பேன்சி ஸ்டோர், பழமுதிர் நிலையம், உணவகங்களுக்கு தலா ரூ.2,000 வீதம் 5 கடைகளுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கினர்.

    மேலும் பாஸ்ட் புட் கடையில் சில்லி சிக்கன், மீன் சில்லிக்கு அதிகமாக கலர் பயன்படுத்தியதற்காக ரூபாய் 1,000 அபராதம் விதித்தனர்.

    இந்த அபராத தொகையை ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஸ்டேட் பேங்க் மூலமாகவோ செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அளித்தனர்.

    மேலும் இது போன்று தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தக் கூடாது எனவும், பார்சல் கொடுப்பதற்கும் உண்பதற்கும் வாழை இலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், பாலித்தீன் பைகளுக்கு பதிலாக துணி பைகளை பயன்படுத்தப்பட வேண்டும், சூடான சாம்பார் ரசம் போன்ற குழம்புகளை சில்வர் கவர் அல்லது அலுமினியம் பாயில் கவரில் கட்டி கொடுக்க வேண்டும் என உணவகங்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    மேலும் மளிகை கடைகள், பழமுதிர் நிலையங்கள் போன்ற அனைத்து கடைகளிலும் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் விற்பனை செய்யக்கூடாது எனவும் பொது மக்களுக்கு உணவுப் பொருட்களை போட்டுக் கொடுக்கக் கூடாது எனவும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தினார்.

    இது போன்று சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

    Next Story
    ×