search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா விற்ற மூதாட்டி உள்பட 3 பேர் கைது
    X

    கஞ்சா விற்ற மூதாட்டி உள்பட 3 பேர் கைது

    • சீனாபுரம் டாஸ்மாக் கடை அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 2 பேரை பிடித்து சோதனை செய்த போது பிளாஸ்டிக் கவர்களில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்துள்ள சீனாபுரம் டாஸ்மாக் கடை அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.

    சோதனையில் சந்தேகப்படும் படி நின்றிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்த போது பிளாஸ்டிக் கவர்களில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பெருந்துறை பட்டக்காரன் பாளையம், கிழக்கு ஆயிக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த செரீப் (54), சத்யா நகரை சேர்ந்த முனியப்பன் (30) என்பது தெரியவந்தது.

    இவர்கள் திருவாச்சி வாவிக்கடையை சேர்ந்த பாப்பாத்தி (70) என்ற மூதாட்டியிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து பாப்பாத்தியை போலீசார் கைது செய்தனர். இவர்களி டமிருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×