search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவானிசாகர் அணை நீர் தேக்கத்தில் 2.90 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன
    X

    பவானிசாகர் அணை நீர் தேக்கத்தில் 2.90 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன

    • மீன் வளர்ச்சி கழகம் சார்பில் பவானிசாகர் அணை நீர் தேக்கத்தில் 2.90 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன
    • இந்த ஆண்டு இதுவரை 5 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்ப ட்டு ள்ளதா கவும் மீன் வளர்ச்சி கழக அதி காரிகள் தெரிவித்து ள்ளனர்.

    சத்தியமங்கலம்,

    பவானிசாகர் அணை நீர் தேக்கப் பகுதியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் மின் குஞ்சுகள் விடப்பட்டு மீன்கள் நன்கு வளர்ந்த பின் பிடிக்கப்பட்டு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் விற்பனை நிலை யங்களில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் ஆழியாறு மேலாளர் சுகுமார் தலைமை யில் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் மீன் குஞ்சுகள் விடும் பணி நடைபெற்றது.

    மின் துறை சார்பில் வளர்க்கப்பட்ட கட்லா இனத்தைச் சேர்ந்த 1 லட்சத்து 70 ஆயிரம் மீன் குஞ்சுகளும், ரோகு இனத்தைச் சேர்ந்த 1 லட்சத்து 20 ஆயிரம் மீன் குஞ்சுகளும் என மொத்தம் 2.90 லட்சம் மீன் குஞ்சுகள் பவானிசாகர் அணியின் நீர்த்தேக்க பகுதியில் விடப்பட்டது. தற்போது விடப்பட்ட மீன் குஞ்சுகள் 60 நாட்களில் நன்கு வளர்ந்த உடன் மீனவ ர்கள் மூலம் பிடி க்கப்பட்டு விற்ப னைக்கு அனுப்பி வைக்க ப்படும் எனவும், ஆண்டொ ன்றுக்கு பவானி சாகர் அணையில் 39 லட்சம் மீன் குஞ்சுகள் விட ப்படுவ தாகவு ம் தற்போது இந்த ஆண்டு இதுவரை 5 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்ப ட்டு ள்ளதா கவும் மீன் வளர்ச்சி கழக அதி காரிகள் தெரிவித்து ள்ளனர்.

    Next Story
    ×