search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது விற்ற 2 பேர் கைது
    X

    மது விற்ற 2 பேர் கைது

    • அந்தியூர் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர்.
    • மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் செம்புளிச்சாம்பாளையம் கசாப் கடை வீதியில் அந்தியூர் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மொபட்டில் வந்த நபரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் அந்த நபர் அதேபகுதியை சேர்ந்த அய்யாசாமி (40) என்பதும், அவரது மொபட்டை சோதனை செய்தபோது மதுபான பாட்டில்களை டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில் அதிக லாபத்தில் விற்பனை செய்வதற்காக எடுத்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அய்யாசாமியை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 13 மதுபாட்டில்கள் மற்றும் மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பெரியசெம்மாண்டாம்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட அதேபகுதியை சேர்ந்த சாமியப்பன் (80) என்பவரை மலையம்பாளையம் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×