search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரி அருகே பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம்
    X

    கோத்தகிரி அருகே பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம்

    • சுய உதவி பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம் கரிக்கையூர் கிராமத்தில் நடத்தப்பட்டது.
    • தொழில் துவங்க ஆர்வமுள்ள பயனாளிகளுக்கு கடனுதவிகள் குறித்து விளக்கப்பட்டது.

    அரவேணு,

    கோத்தகிரி அருகே அரக்கோடு, கடினமாலா, தேனாடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சுய உதவி பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம் கரிக்கையூர் கிராமத்தில் நடத்தப்பட்டது.

    கூட்டத்தில் தொழில் துவங்க ஆர்வமுள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு தொழிலுக்கும் வழங்கப்படும் கடனுதவிகள், தேவைபடும் ஆவணங்கள், எவ்வாறு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்புவது குறித்து ஆலோசனை வழங்கபட்டது.

    இப்பகுதிகளில் சிறப்பாக பணியாற்றி வரும் களபணியளார்கள் சிவகுமார், சுதாகரன், சிவகுமார், தமிழ்செல்வன் தியாகராஜன் ஆகியோருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    கூட்டத்தில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மற்றும் கனரா வங்கி அலுவலர் யூ.என்.சி.எஸ் தலைமை அலுவலர், களப்பணி அலுவலர்கள் சுய உதவிகுழு பெண்கள் மற்றும் இளைஞர்கள் 37 பேர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×