search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே தாய் இறந்த சோகத்தில் என்ஜினீயர் தற்கொலை
    X

    திருவள்ளூர் அருகே தாய் இறந்த சோகத்தில் என்ஜினீயர் தற்கொலை

    • கடந்த 2 மாதத்திற்கு முன்பு உதயகுமாரின் தாய் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
    • நண்பர்கள் வேலைக்கு சென்றபோது, உடல் நிலை சரியில்லை எனக்கூறி உதயகுமார் மட்டும் வீட்டில் இருந்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் ஜீவானந்தம் தெருவில் வசித்து வந்தவர் உதய குமார் (வயது25). என்ஜினீயர். தஞ்சாவூர் மாவட்டம் மனத்திடல் கிராமத்தைச் சேர்ந்த இவர் மணவாளநகரில் நண்பர்களுடன் தங்கி மப்பேடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2 மாதத்திற்கு முன்பு உதயகுமாரின் தாய் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதற்காக சொந்த ஊருக்கு சென்று வந்த பின்னர் உதயகுமார் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். தாயின் மறைவை தாங்கிக்கொள்ள முடியாமல் நண்பர்களிடம் புலம்பினார். அவருக்கு நண்பர்கள் ஆறுதல் கூறி வந்தனர். காலையில் நண்பர்கள் வேலைக்கு சென்றபோது, உடல் நிலை சரியில்லை எனக் கூறி உதயகுமார் மட்டும் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் பணி முடிந்து அவர்கள் திரும்பி வந்தபோது வீட்டில் உள்ள மின் விசிறியில் உதயகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து மணவாள நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அந்தோனி ஸ்டாலின் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாய் இறந்த சோகத்தில் மன வேதனையில் இருந்த உதயகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி தஞ்சாவூரில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×