search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெளியே பகையாளி... உள்ளே பங்காளி...!
    X

    வெளியே பகையாளி... உள்ளே பங்காளி...!

    • சமீபகாலமாக எடப்பாடி பழனிசாமி மிக கடுமையாக விமர்சிப்பதை கட்டுப்படுத்துவதற்கு அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாக வேண்டும் என்பதில் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறாராம்.
    • செந்தில் பாலாஜியிடம் புது அசைன்மெண்ட் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் எதிரும் புதிரும் என்பது தெரிந்ததே! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சிப்பது அரசியல் களத்தில் நடப்பதுதான். சமீபகாலமாக எடப்பாடி பழனிசாமி மிக கடுமையாக விமர்சிப்பதை கட்டுப்படுத்துவதற்கு அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாக வேண்டும் என்பதில் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறாராம். அதற்காக செந்தில் பாலாஜியிடம் புது அசைன்மெண்ட் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    பொதுவாக மாற்றுக்கட்சிகளில் இருந்து நிறைய பேரை அழைத்து வந்து தி.மு.க.வில் இணைப்பதில் முன்னணியில் இருப்பவர் செந்தில் பாலாஜி. அவருக்கு இப்போது ஒரு புது 'அசைன்மென்ட்' கொடுக்கப்பட்டுள்ளது.

    பிற கட்சி தொண்டர்களை இணைப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அதே சமயம் பெரிய புள்ளிகளை வளைத்து வாருங்கள். குறிப்பாக சட்டமன்றத்தில் நமது பேச்சுக்கு எதிர்க்கட்சி வரிசையில் இருந்து சிலராவது மேஜையை தட்ட வேண்டும் அதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து எதிர்கட்சியில் அதிருப்தியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் லிஸ்ட்டை எடுத்து வருகிறார்களாம். எனவே விரைவில் தொகுதிப் பிரச்சினைக்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் முதல்வரை சந்திக்கலாம் என்கிறார்கள் ஒருவேளை அமைச்சர் துரைமுருகன் சொன்னது போல் நாங்கள் பகையாளிகளாக இருந்தாலும் பங்காளிகள் என்பது இப்படித்தானோ?

    Next Story
    ×