என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்பு செய்துள்ள வடிகால் வாய்க்காலின் ஒருபகுதி.
வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு
- மழைகாலங்களில் மழைநீரை வடிய வைக்க முடியவில்லை.
- சுமார் 40 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
மெலட்டூர்:
அன்னப்பன்பேட்டை சேர்ந்த விவசாயிகள் தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு, அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது;-
பாபநாசம் தாலுக்கா, அன்னப்பன்பேட்டை கிராமத்தில் பல விவசாய நிலங்களின் முக்கிய வடிகால் வாய்க்காலை தனிநபர் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதனால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனால் மழைகாலங்களில் மழைநீரை வடிய வைக்க முடியவில்லை. சுமார் 40 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே விவசாயிகளின் சிரமத்தை உணர்ந்து உடனடியாக வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






