search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
    X

    கலெக்டர் மகாபாரதி.

    வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

    • 10 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
    • விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி கடைசி நாளாகும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    மயிலாடுதுறை மாவட்ட திட்ட செயலாக்க அலகு, வாழ்வாதார திட்ட பணிகள் மேற்கொள்வதற்கு செம்பனார்கோயில், சீர்காழி, மயிலாடுதுறை, குத்தாலம் ஆகிய வட்டாரங்களில் காலியாக உள்ள 10 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இப்பணிகளுக்கு 28 வயதுக்கு மிகாமல் உள்ள பட்டதாரிகள் விண்ண ப்பிக்கலாம். MS-Office 3 மாத காலத்திற்கு படித்திருக்க வேண்டும் (சான்றுடன்), கணினி அறிவியலில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    வாழ்வாதார திட்டப்பணிகள் குறித்து 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    அதே வட்டாரத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

    எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு மூலம் விண்ணப்ப தாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி கடைசி நாளாகும், அதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது.

    விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு நடைபெறும் தேதி கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.

    விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: –

    திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், கச்சேரி ரோடு, ஆர்.டி.ஓ. அலுவலகம் பின்புறம், மயிலாடுதுறை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×