என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்
- உணவு உள்ளிட்ட அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யப்பட முடியாத நிலையில் அவதிப்பட்டு வருகின்றனர்.
- பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படும் நேரத்தை 9 மணியிலிருந்து 10 மணியாக மாற்றி அமைக்க வேண்டும்.
கடத்தூர்,
மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரத்துறை சார்பில் மாதந்தோறும் மின் நிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த மின் நிறுத்தம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மற்றும் மாலை 5 மணி வரை செய்யப்பட்டு வருகின்ற நிலையில், காலை 9 மணி முதல் செய்யப்படும் மின் நிறுத்தத்தால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் அரசு, தனியார் வேலைகளுக்கு செல்லும் பணியாளர்கள் பெரும் சிரமத்திற்கும் உள்ளாகி வருகின்றனர்.
மின்நிறுத்த நாட்களில் அவர்களின் உணவு உள்ளிட்ட அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யப்பட முடியாத நிலையில் அவதிப்பட்டு வருகின்றனர்.
இவற்றை சீராக்கும் வகையில் மின்சார துறை சார்பில் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படும் நேரத்தை 9 மணியிலிருந்து 10 மணியாக மாற்றி அமைக்க வேண்டும் என மின்சார துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.






