search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்வாரிய  தொ.மு.ச. சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்கள்
    X

    மின்வாரிய தொ.மு.ச. சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்கள்

    • வேட்டி, சட்டைகள், புடவைகள் பச்சரிசி, வெல்லம், பொங்கல் பொருட்களுடன்மஞ்சள் பை வழங்கப்பட்டது.
    • மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.

    அனுப்பர்பாளையம் :

    பொங்கல் பண்டிகையையொட்டி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 10-வது ஆண்டாக போயம்பாளையத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. ஆலோசனைப்படி, தொ.மு.ச பேரவை மாநில துணைச் செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன், வடக்கு மாநகர செயலாளரும் மாநகர மேயருமான தினேஷ்குமார் வழிகாட்டுதல் படியும், ஈ.பி.அ.சரவணன் ஏற்பாட்டில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தொ.மு.ச. பேரவை கவுன்சில் துணை தலைவர் ஆர்.ரெங்கசாமி தலைமை தாங்கினார். தொ.மு.ச. மாநில தலைவர் மின்வாரிய பொறியாளர் பண்டிதத்துரை முன்னிலை வகித்தார்.

    இதில் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேட்டி, சட்டைகள், புடவைகள் பச்சரிசி, வெல்லம், பொங்கல் பொருட்களுடன்மஞ்சள் பை வழங்கப்பட்டது. பின்னர் பொங்கல் வைத்து சமத்தவப்பொங்கல் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. அமைப்பு செயலாளர் வரதராஜன், சமூக ஆர்வ–லர் ஆண்டிபாளையம் ரவி, பாண்டியன் நகர் தி.மு.க. அவைத்–தலைவர் தயானந்தம், 7-வது வட்ட தி.மு.க.செயலாளர் செல்வராஜ், மாவட்ட ஓட்டல் தொ.மு.ச. பொது செயலாளர் மகேஷ்குமார், அமைப்புசாரா தொ.மு.ச. செயலாளர்கள் பழனிச்சாமி, சானைராஜா, மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. துணை தலைவர் பெருமாநல்லூர் செந்தில் என்கிற பழனிச்சாமி, ஜோதிபாசு, வெள்ளையப்பன், தொ.மு.ச. நிா்வாகிகள் உள்ளிட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை செயலாளர் ஈ.பி.அ.சரவணன் செய்திருந்தார்.

    Next Story
    ×