search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் மனைவி இறந்த துக்கத்தில் முதியவர்  தற்கொலை
    X

    கடலூரில் மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் தற்கொலை

    • கடலூரில் மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருமாணிக்குழியை சேர்ந்தவர் விட்டல் நாதன் (வயது 87). இவரது மனைவி கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இதன் காரணமாக முதியவர் விட்டல்நாதன் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், சம்பவத்தன்று அதே பகுதியில் பூச்சி மருந்து குடித்து மயக்க நிலையில் இருந்தார்.

    இவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று விட்டல்நாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×