என் மலர்
உள்ளூர் செய்திகள்

குன்னூரில் தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
- போலீசார் உடலை கைப்பற்றி குன்னூர் அரசு லாலி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குன்னூர்,
குன்னூர் கன்னிமாரியம்மன் கோவில் தெரு அருகே உள்ள வனப்பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக குன்னூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு லாலி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் தற்கொலை செய்தவருக்கு 65 வயது இருக்கும், எதற்காக தற்கொலை செய்தார், அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல் அடையாளம் தெரிவதற்காக வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story