என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் முதியவரை தாக்கி ரூ.1¾ லட்சம் கொள்ளை
By
மாலை மலர்29 Dec 2022 9:44 AM GMT

- வாலாஜாபாத்தில் உள்ள ஒரு கடையில் ரூ.1 லட்சத்து 88 ஆயிரம் வசூல் செய்து விட்டு காஞ்சிபுரம் பஸ் நிலையம் வந்தார்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென முதியவர் ரத்தினக்கரன் வைத்திருந்த பணப்பையை பறித்தனர்.
காஞ்சிபுரம்:
வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரத்தினக்கரன்(66). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வாலாஜாபாத்தில் உள்ள ஒரு கடையில் ரூ.1 லட்சத்து 88 ஆயிரம் வசூல் செய்து விட்டு காஞ்சிபுரம் பஸ் நிலையம் வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென முதியவர் ரத்தினக்கரன் வைத்திருந்த பணப்பையை பறித்தனர். ஆனால் அவர் பணப்பையை விடாமல் பிடித்ததால் சுமார் 100 மீட்டருக்கு மேல் சாலையில் தரதரவென இழுத்து சென்றனர். பின்னர் அவரை தாக்கி பணத்தை பறித்துவிட்டு கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர். இதில் முதியவர் ரத்தினக்கரன் பலத்த காயம் அடைந்தார்.
இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
