search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்   நாளை நடக்கிறது
    X

    கோப்புபடம்

    மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது

    • கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது
    • மின் நுகர்வோர்கள் கலந்து கொள்ளலாம்.


    திருப்பூர்,

    தமிழ்நாடு மின்சார வாரியம் அவினாசி மின்பகிர்மான வட்டசெயற்பொறியாளர் விஜயஈஸ்வரன் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- அவினாசி மின்வாரிய அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமை தாங்குகிறார். மின்நுகர்வோர் தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் தாராபுரம் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தாராபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (புதன்கிழமை) தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடக்கிறது. மின் நுகர்வோர்கள் கலந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்படடுள்ளது.

    Next Story
    ×