என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறி 2 பேரிடம் ரூ.32 லட்சம் மோசடி
- கிருஷ்ணகிரி அருகே ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 32 லட்சம் மோடி என புகார்.
- சைபர் கிரைம் போலீசார் விசாரணை.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா புளியம்பட்டி அருகே உள்ள கே.மோட்டூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 37). பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 5-ந் தேதி இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது.
அதில் இன்ஸ்டாகிராமில் பகுதி நேர வேலை என்றும், மேலும் பண முதலீட்டுக்கு அதிக லாபத்துடன் தருவதாகவும் கூறப்பட்டிருந்தது. இதை நம்பி கோவிந்தராஜ் அதில் குறிப்பிட்டிருந்த எண்ணிற்கு ரூ.12 லட்சத்து 45 ஆயிரத்து 641 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்தார்.
அனால் சொன்னபடி கோவிந்தராஜிற்கு எந்த தொகையும் லாபத்துடன் வரவில்லை. இதையடுத்து அதில் குறிப்பட்டிருந்த எண்ணிற்கு அவர் தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோவிந்தராஜ் அது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
மற்றொரு சம்பவம்
ஓசூர் அண்ணா நகரை சேர்ந்தவர் இளையராஜர் (32). இவரது செல்போன் வாட்ஸ்அப் எண்ணிற்கு கடந்த 19-ந் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் யூடியூப்பில் மதிப்புரை செய்யும் பகுதி நேர வேலை என்றும், மேலும் முதலீட்டிற்கு அதிக லாபத்துடன் தருவதாகவும் கூறப்பட்டிருந்தது.
அதை நம்பி இளையராஜா ரூ.19 லட்சத்து 58 ஆயிரத்து 669 தொகையை வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்தார். அந்த தொகையை பெற்ற பிறகு இளையராஜாவிற்கு எந்த பணமும் திரும்ப வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த இளையராஜா அதில் குறிப்பட்டிருந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேச முயன்ற போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்தை உணர்ந்த இளையராஜா அது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இந்த 2 புகார்கள் குறித்தும் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்