search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாரமங்கலத்தில் செம்மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
    X

    தாரமங்கலத்தில் செம்மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

    • தாரமங்கலம் பகுதியில் செம்மண் கடத்துவதாக கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்ததில், உரிய சீட்டு இல்லாமல் செம்மண் ஏற்றி வரப்பட்டது தெரியவந்தது.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் செம்மண் கடத்துவதாக கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சேலம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்க துறை தனி தாசில்தார் செல்வகுமார் தலைமையில் தாரமங்கலம்-சங்ககிரி நெடுஞ்சாலையில் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்ததில், உரிய சீட்டு இல்லாமல் செம்மண் ஏற்றி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து டிப்பர் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் லாரியை ஓட்டி வந்த நங்கவள்ளி எல்லகுட்டையூர் பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 48) மற்றும் அதன் உரிமையாளர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×