search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒட்டன்சத்திரம் அருகே குடிபோதையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த வாலிபர்
    X
    கோப்பு படம்

    ஒட்டன்சத்திரம் அருகே குடிபோதையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த வாலிபர்

    • மனைவி மீது உள்ள கோபத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்ததால் வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
    • போலீசார் வாலிபரை எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயம் கோ. கீரனூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை உள்ளது. இதன் அருகிலேயே ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று இங்கு புகுந்த மர்ம நபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தார். இதைப் பார்த்ததும் அப்பகுதி பொதுமக்கள் கொள்ளை முயற்சி நடைபெறுகிறதோ என்ற அச்சத்தில் கள்ளிமந்தயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் சுற்றித் திரிந்த அவர் மனைவி மீது உள்ள கோபத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டார் என்பது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் சொந்த பிரச்சினைக்காக பொது சொத்தை சேதப்படுத்தக்கூடாது என வாலிபரை எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×