என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திண்டுக்கல்லில் போதை பயன்பாட்டிற்கு எதிராக மாணவர்கள் விழிப்புணர்வு
Byமாலை மலர்29 Jun 2022 7:00 AM GMT
- உலகபோதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி திண்டுக்கல்லில் இன்று நடைபெற்றது.
- அரசு அதிகாரிகள், காவல்துறையினர், மாணவர் அமைப்பினர், தன்னார்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்:
உலகபோதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி திண்டுக்கல்லில் இன்று நடைபெற்றது. கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் விசாகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேரணி சப்-கலெக்டர் ஆபீஸ் ரோடு, தலைமை தபால் நிலையம், பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி வழியாக மீண்டும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ-மாணவிகள் போதைபொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தியபடியும், கோசங்கள் எழுப்பியபடியும் சென்றனர்.
பேரணியில் கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், கலால் உதவி ஆணையர் சண்முகம் மற்றும் அரசு அதிகாரிகள், காவல்துறையினர், மாணவர் அமைப்பினர், தன்னார்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X