என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் போதை இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    பேரணியை மாவட்ட கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார்.

    திண்டுக்கல்லில் போதை இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • போதை ப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற நிலை யினை எட்டும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதை ஒழிப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

    திண்டுக்கல்:

    சர்வதேச போதை ப்பொருள் ஒழிப்பு தினத்தி னை முன்னிட்டு, "போதை ப்பொருள் இல்லாத தமிழ்நாடு" என்ற நிலை யினை எட்டும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் பூங்கொடி திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைவரும் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்று க்கொண்டனர்.

    இதில் கலெக்டர் தெரி வித்ததாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்க ளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அவற்றை செயல்படுத்தி வருகிறார். மாணவ-மாணவிகள் போதை போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்கும் வகையில், தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்ட உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, தமிழகம் முழுவதும் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடத்த அறிவுறுத்தியுள்ளார்.

    போதைப்பொருள் பழக்கம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். அறியாத சிறு வயதினரிடையே ஏற்படும் இந்தப் பழக்கத்தினால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். போதைப் பழக்கத்தினால் ஒருவர் பாதிக்கப்படுவதனால், அவர் மட்டுமின்றி அவரு டைய குடும்பம் மற்றும் சமுதாயமும் பாதிக்கப்படு கிறது. எனவே, நண்பர்கள், உறவினர்கள் அனைவரிட த்திலும் போதை பொரு ள்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். எதிர்கால சமூகத்தை சீரமைக்க வேண்டிய கடமை, பொறுப்பு நம் அனை வருடைய கையில் உள்ளது.

    மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதை ஒழிப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

    திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக த்தில் தொடங்கிய விழிப்பு ணர்வு பேரணி, பேருந்து நிலையம், பூ மார்க்கெட், காமராஜர் சிலை, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்து வமனை வழியாக மீண்டும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சென்று நிறை வடைந்தது. பேரணியில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், "ஒழிப்போம் ஒழிப்போம் போதை பழக்கத்தை ஒழிப்போம், அழிப்போம் அழிப்போம் உள்ளிட்ட போதை ஒழிப்பு ெதாடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் கமலக்கண்ணன், உதவி ஆணையர்(கலால்) சிவக்குமார், கோட்ட அலு வலர் (கலால்) திண்டுக்கல் நவனீதன், மதுவிலக்கு ப்பிரிவு ஆய்வாளர் ராஜபுஷ்பம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×