search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலம் அருகே சாலை ஓர தடுப்புக்கட்டையில் லாரி மோதி  டிரைவர் பலி
    X

    மயிலம் அருகே சாலை ஓர தடுப்புக்கட்டையில் லாரி மோதி டிரைவர் பலி

    • மயிலம் அருகே சாலை ஓர தடுப்புக்கட்டையில் லாரி மோதி டிரைவர் பலியானார்.
    • விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை நாகப்பட்டினம் மாவட்டம் திருகுவளை பகுதியை சேர்ந்த குமரேசன்(26), என்பவர் ஓட்டி சென்றார். மயிலம் அருகே விளங்கம்பாடி அய்யனா ரப்பன் கோயில் எதிரே சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த இரும்பு தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த மயிலம் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×