என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி டிரைவர் சாவு
- ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து அவர்கள் மீது மோதியது.
- அங்கு வெங்கடாஜலம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே குண்டாலமடுவு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாஜலம் (வயது40). லாரி டிரைவரான இவர் தனது நண்பர் எஸ்.மோட்டூரைச் சேர்ந்த தர்மலிங்கம் (30) என்பவருடன் சம்பவத்தன்று தருமபுரி-திருப்பத்தூர் சாலை மஞ்சமேடு என்ற பகுதியில் நடந்து சென்றார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து அவர்கள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த 2 பேரையும் உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வெங்கடாஜலம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த தர்மலிங்கத்திற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






