என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டு முன்பு பிணமாக கிடந்த வாலிபர்
வேடசந்தூரில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்த டிரைவர்
- வேடசந்தூரில் ரத்த காயத்துடன் டிரைவர் இறந்து கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
- அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேடசந்தூர் :
திண்டுக்கல்மாவட்டம் வேடசந்தூர் ஆத்து மேடு அருகே ராஜகோபால புரத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 40). தாய் தந்தை இல்லாத இவருடைய உறவினர்கள் அனைவரும் வெளியூரில் உள்ளனர். இங்கு டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவர் இன்று காலை காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் தனது வீட்டின் முன்பாக பிணமாக கிடந்தார். இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் ராஜேஷ் உடலை மீட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடலில் பலத்த காயங்கள் இருப்பதால் ராஜேசை யாரும் கொலை செய்து உடலை வீசிச் சென்றனரா? என விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story