டவுனில் குடிநீர் குழாய் உடைந்து தெருவில் ஆறாக ஓடிய தண்ணீர்

வழுக்கோடையில் இருந்து தொண்டர் சன்னதி வரையிலும் வாறுகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பள்ளங்கள் தோண்டப்பட்டபோது குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டது.
குழாயில் ஏற்பட்ட உடைப்பால் தெருவில் ஓடிய தண்ணீர்.
குழாயில் ஏற்பட்ட உடைப்பால் தெருவில் ஓடிய தண்ணீர்.
Published on

நெல்லை:

நெல்லை மாநகர பகுதியில் வழுக்கோடையில் இருந்து தொண்டர் சன்னதி வரையிலும் வாறுகால் அமைக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக வழுக்கோடையில் இருந்து ஜே.சி.பி. எந்திரம் மூலமாக வாறுகால் அமைக்க பள்ளங்கள் தோண்டப்பட்டது. அப்போது சில இடங்களில் குடிநீர் திட்டப் பணிக்காக போடப்பட்டிருந்த குழாய்களில் இன்று உடைப்பு ஏற்பட்டது. இதனால் அதிலிருந்து அதிக அளவில் குடிநீர் வெளியேறியது. குடிநீர் வாறுகாலில் முழுவதுமாக நிரம்பி சாலையில் ஆறாக ஓடியது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து குடிநீர் வினியோகத்தை நிறுத்தி குழாயை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com