என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் பாட்டில்கள் பறிமுதல்
    X

     பொதுமக்கள் கொண்டு வந்த குடிநீர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அடுக்கி வைத்துள்ள காட்சி.

    கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் பாட்டில்கள் பறிமுதல்

    • தற்கொலையிலிருந்து காப்பாற்றி அறிவுரைகள் கூறி அனுப்பி வைக்கின்றனர்.
    • இந்த மாதத்தில் மட்டும் 2 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறை தீர் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் மனு கொடுக்க வரும் பொதுமக்களில் யாராவது ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்காக மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோலை தங்களது உடலில் ஊற்றிக் கொள்கின்றனர். இவர்களைக் போலீசார் மீட்டு, தற்கொலையிலிருந்து காப்பாற்றி அறிவுரைகள் கூறி அனுப்பி வைக்கின்றனர்.

    இது போன்ற சம்பவங்களைத் தடுப்பதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் கொண்டு வரும் குடிநீர் பாட்டில்களை போலீசார் பரிசோதித்து உள்ளே அனுமதித்து வந்தனர்.

    இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு கொடுக்க வந்த பெண், கலெக்டர் முன்னிலையிலேயே மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தனது உடலில் ஊற்றிக் கொண்டார். இதுபோல இந்த மாதத்தில் மட்டும் 2 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதனால், குடிநீர் பாட்டில் என்ற பெயரில் மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோல் நிரப்பி எடுத்துக் கொண்டு உள்ளே செல்வதைத் தடுக்க இன்று குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் கொண்டு வந்த குடிநீர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து ஓரமாக அடுக்கி வைத்தனர். பின்னர் மனு கொடுத்த பின்னர் வீட்டுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களது குடிநீர் பாட்டில்களை மீண்டும் எடுத்துச் சென்றனர்.

    Next Story
    ×