என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மானூரில் தி.மு.க. தெருமுனை கூட்டம்
    X

    கூட்டத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் பேசிய காட்சி

    மானூரில் தி.மு.க. தெருமுனை கூட்டம்

    • மானூர் தெற்கு பட்டியில் தி.மு.க சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
    • தொண்டரணி நிர்வாகிகள் சார்பில் துண்டு பிரசுரம் வழங்கி தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது.

    நெல்லை:

    முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் தெருமுனை கூட்டம் மானூர் தெற்கு பட்டியில் நடைபெற்றது.

    மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் ஏற்பாட்டில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமை தாங்கி பேசினார். தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் தொப்பி மைதீன் மற்றும் தொண்டரணி நிர்வாகிகள் சார்பில் துண்டு பிரசுரம் வழங்கி தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது. தலைமைக்கழக பேச்சாளர் கடையநல்லூர் இஸ்மாயில் சிறப்புரை ஆற்றினார்.

    இக்கூட்டத்தில் மகளிர் தொண்டரணி மாநில துணைச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான விஜிலா சத்யானந்த், மாவட்ட துணைச் செயலாளர் கிரிஜாகுமார், துணை மேயர் ராஜூ,முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், மாநகர பொருளாளர் பூக்கடை அண்ணாத்துரை, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மீரான் மைதீன், மிக்கேல், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி, சிறுபான்மை நல உரிமை பிரிவு மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் நவ்ஷாத், வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் சேக்தாவூது, ஆதிதிராவிட நலக்குழு மாவட்ட அமைப்பாளர் நவநீதன், மகளிர் தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் அனிதா, மாவட்ட துணை அமைப்பாளர் தேவிகா, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் ராஜகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×