என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் தி.மு.க. இளைஞரணி ஆர்ப்பாட்டம்
- மத்திய அரசை வலியுறுத்தி, ஓசூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- கவுன்சிலர்கள் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞரணி மற்றும் மாவட்ட மாணவர் அணி சார்பில் இந்தி திணிப்பையும் மற்றும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி, ஓசூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர் ராம் நகர் அண்ணா சிலை எதிரில் நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ் தலைமை தாங்கினார். மாநில, மாவட்ட, மாநகர ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இதில், பிரகாஷ் எம்.எல்.ஏ, மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன், மற்றும் நிர்வாகிகள் மத்திய அரசை கண்டித்து பேசினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில், துணை மேயர் ஆனந்தய்யா, தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, மாநகர, ஒன்றிய பேரூர் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
முடிவில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்ராமு நன்றி கூறினார்.






