search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில்  தி.மு.க. கொடியேற்று விழா
    X

    தி.மு.க. கொடியேற்று விழா நடந்த போது எடுத்த படம்


    சங்கரன்கோவிலில் தி.மு.க. கொடியேற்று விழா

    • சங்கரன்கோவிலில் தி.மு.க. சார்பில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.
    • மரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் தி.மு.க. சார்பில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, மாவட்ட துணைச் செயலாளர் புனிதா முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு சங்கரன்கோவில் 4, 7,15, 16, 29 ஆகிய வார்டுகளில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து கழுகுமலை ரோடு காளியம்மன் கோவில் அருகில் உள்ள நுழைவு வாயிலை திறந்து வைத்தார். மரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார். இதில் பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, மூத்த உறுப்பினர்கள் சண்முகசுந்தரம், சந்திரன், கணேசன், நகர அவைத் தலைவர் முப்பிடாதி, மாவட்ட பிரதிநிதிகள் செய்யதுஅலி, முத்துக்குமார், டைட்டஸ், நகர பொருளாளர் லாசர் என்ற சதாசிவம், நகர துணை செயலாளர்கள் மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய், இளைஞர் அணி சரவணன், கார்த்தி, அப்பாஸ்அலி, வக்கீல் சதீஷ், வார்டு செயலாளர்கள் வாழைக்காய் துரைப்பாண்டியன், முத்துக்குமார், வைரவேல், வீராசாமி, வீரமணிகண்டன், பழனிச்சாமி, ஜிந்தா மைதீன், தடிகாரன், மற்றும் அணி சிறுபான்மையினர் அணி அப்துல்காதர், அஜய்மகேஷ்குமார், சங்கர், விக்னேஷ், பிரகாஷ், ஜெயகுமார், அன்சாரி, ரகுமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×