search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி புத்தாடைகள்
    X

    தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி புத்தாடைகள்

    • விழாவில் ஆண்களுக்கு வேட்டி, சட்டைகளும், பெண்களுக்கு சேலைகளையும் பேரூராட்சி தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் சிறப்புப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் மகாத்மா காந்திஜி சேவா சங்க அலுவலகத்தில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கும், பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை நங்கநல்லூர் சித்தானந்தம், பத்மாவதி அம்மாள் குடும்பத்தின் சார்பாகவும், சுப்பிரமணியபுரம் இசக்கிசெல்வம் குடும்பத்தின் சார்பாகவும், புத்தாடைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு பேரூராட்சி தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் தலைமை தாங்கி ஆண்களுக்கு வேட்டி, சட்டைகளும், பெண்களுக்கு சேலைகளும் வழங்கினார். சங்கத்தலைவர் தவமணி, பொருளாளர் தமிழரசன், பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் சிறப்புப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் பள்ளியின் ஆசிரியர்கள் சாந்தி, ஹெலன் இவாஞ்சலின், இயன்முறை மருத்துவர் புனிதா, மாணவ - மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×