search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாரமங்கலம் அருகே பால் உற்பத்தியாளர்கள் சங்க  உறுப்பினர்களுக்கு தீபாவளி போனஸ்
    X

    தாரமங்கலம் அருகே பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி போனஸ்

    • பச்சாகவுண்டனூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் சுமார் 100 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
    • இவர்களுக்கு சுமார் 30 ஆண்டுக்கு பின் தீபாவளி போனஸ் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள செலவடை கிராமம் பச்சாகவுண்டனூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் சுமார் 100 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் தினமும் விவசாயிகள் சுமார் 700லிட்டர் பாலை கொண்டு வந்து கொடுக்கின்றனர். இங்கு சேகரிக்கும் பால் சேலம் பால் பண்ணைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த நிலையில் சங்கம் உருவாக்கியதில் இருந்து முதல் முறையாக 30ஆண்டுக்கு பின்னர் பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. சங்கத்தில் உள்ள லாப தொகையில் இருந்து 83 ஆயிரம் ரூபாயை உறுப்பினர்களுக்கு பகிர்ந்து வழங்கியுள்ளனர். இந்த போனஸ் வழங்கியதால் மேலும் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறினர்.

    இந்த நிகழ்ச்சியில் பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் மாணிக்கம், துணைத் தலைவர் சின்னண்ணன் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், மலர், ரத்தினம், வெங்கடாஜலபதி, குமார், கண்ணன், செயலாளர் ஜெயக்குமார், கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×