search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: தருமபுரி அணி முதலிடம் பெற்று சாதனை
    X

    கடத்தூரில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் நிவேதா ஜெஷிகா ஆகியோர் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கிய போது எடுத்த படம்.

    மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: தருமபுரி அணி முதலிடம் பெற்று சாதனை

    • மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.
    • தருமபுரி அப்துல் கலாம் கிரிக்கெட் கிளப் அணிக்கு ரூ.1,00,000 ரொக்க பணம் மற்றும் கோப்பையை வழங்கினார்.

    தருமபுரி,

    தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி மாவட்டத்தில் 5 இடங்களில் நடைபெற்றது.

    இதற்கான இறுதிப் போட்டி கடத்தூர் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி விளையாட்டு மைதா–னத்தில் நடைபெற்றது.

    இந்த போட்டிகளில் தருமபுரி அணி முதலி–டத்தையும், மாரண்டஹள்ளி அணி 2-ம் இடத்தையும், பென்னாகரம் அணி 3-ம் இடத்தையும், ஆலமரத்துப் பட்டி அணி 4-ம் இடத்தை யும் பிடித்தது.

    போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கும் விழா நடை–பெற்றது. விழாவுக்கு மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.

    விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாம்பே சக்தி, பாலாஜி, சசிக்குமார், சதிஸ், செந்தமிழ், தினேஷ் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் நிவேதா ஜெஷிகா ஆகியோர் முதலிடம் பெற்ற தருமபுரி அப்துல் கலாம் கிரிக்கெட் கிளப் அணிக்கு ரூ.1,00,000 ரொக்க பணம் மற்றும் கோப்பையை வழங்கினார்கள்.

    இதேபோன்று ரூ.2,20,000 மதிப்புள்ள ரொக்க தொகை 2-ம், 3-ம் பரிசு மற்றும் ஆறுதல் பரிசுகள் 7 அணி–களுக்கு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கடத்தூர் ஒன்றிய, நகர தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×